चातुर्होत्रचयनम्
(9). மூன்றாவது चयनம் चातुर्होत्रம் என்பது. அதில் கல்லுகளை வைக்கும் விதம் - நாணல் செடிக்குக் கிழக்கே 15 கல்லுகளை தெற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, வடக்கே முடிக்கிறது. தென் புறத்தில் 9 கல்லுகளை மேற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, கிழக்கே முடிக்கிறது. மேல் புறத்தில் 10 கல்லுகளை தெற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, வடக்கே முடிக்கிறது. வடபுறத்தில் 11 கல்லுகளை மேற்கே ஆரம்பித்து வரிசையாய் வைத்து, கிழக்கே முடிக்கிறது. நடுவில் 12 கல்லுகளை மேற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, கிழக்கே முடிக்கிறது. ஆக 57 கல்லுகள். இவைகளில் ஒவ்வொரு வரிசையிலும் கடைசி ஐந்து கல்லுகளை ஹிருதயம் என்கிற மந்திரத்தால் ஒன்றையும், யஜுஸ் என்கிற மந்திரத்தால் இரண்டையும் வைக்கிறது. மற்றவைகளுக்கு வரிசையாய் दशहोता, चतुर्होता, पञ्चहोता, षड्ढोता, सप्तहोता என்கிற மந்திரங்கள். ग्रहम्, प्रतिग्रहम्, लोकम्पृणा என்கிற மந்திரங்களால் வேறுகல்லுகளை இடம் இருக்கும் வரையில் வைக்கிறது. மற்ற வியாபாரங்கள் सावित्रचयनத்தில் போலவே (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19,कण्डि-14).
Go Top