नाचिकेतचयनम्

(7) नाचिकेतचयनம் - இதை सावित्र चयनத்தைப் போலவே செய்கிறது. ஆனால் கோடுகளைக் கிழிப்பதில்லை; கல்லுகள் 21 தான். உத்தரவேதியின் நடுவிலே அவைகளை வைக்கிறது. சக்கிரமாக வைக்கலாம், அல்லது நாலுபக்கங்கள் உள்ளவைகளாயும் வைக்கலாம்; இவைகளுக்கு 21 மந்திரங்கள் 2-வது பிரச்நத்தில் 1-வது அநுவாகத்தில் படிக்கப்பட்டு இருக்கின்றன. கிழக்கே ஆரம்பித்து प्रदक्षिणமாய் கல்லுகளை வைத்து வடக்கே முடிக்கிறது. கடைசியில் स्वयमातृण्णाவை வைப்பது முதல் பாக்கி வியாபாரங்களை ஸாவித்திர சயநத்துக்கு கீழே 4,5-வது பாராக்களில் சொன்னபடி செய்து, முடிக்கிறது.

(8) இந்த சயநத்தை பசுயாகம், ஸோமயாகம், ஸத்திரயாகம். எல்லா சொத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் யாகம் - இவைகளில் செய்யலாம். எங்கே அநேக ஆஹுதிகள் இருக்கின்றனவோ, அங்கேயும். யஜமாநன் கோறும் பலனுக்குத் தகுந்தபடி கல்லுகளை வைக்கலாம். எப்படியென்றால் -

(1) பசுவை ஆசைப்பட்டால், ஒவ்வொரு திக்கிலும் ஐந்து கல்லுகள்; நடுவில் ஒன்று.
(2) எல்லாருக்கும் மேலாக இருப்பதை, நல்லபெயரை, பிள்ளைகுட்டிகளை ஆசைப்பட்டால், கிழக்கேயும், மேற்கேயும் ஏழு, ஏழு கல்லுகள்; தெற்கேயும், வடக்கேயும் மூன்று, மூன்று; நடுவில் ஒன்று.
(3) எல்லோருக்கும் மேலாக இருப்பதை ஆசைப்பட்டால், நடுவில் ஆரம்பித்து, கிழக்கே வைத்துக் கொண்டு போகவேண்டியது.
(4) சுவர்க்கத்தை ஆசைப்பட்டால், மேற்கே ஆரம்பித்து, கிழக்கே வைத்துக் கொண்டு போகவேண்டியது. (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19, कण्डि-14).

Go Top