Go Back

त्रेताग्निः - अग्निहोत्रः, दर्शपूर्णमासौ सोमयागः स्वतन्त्रपशुयागाश्च

विषयः

1. गार्हपत्याग्निः

2. आहवनीयाग्निः

3. दक्षिणाग्निः

4. अंशम् , श्रोणी

5. त्रेताग्निः - संपूर्णचित्रम्

6. यागशाला - पशुयागर्थवेद्यादि

காருகபத்திய அக்கினிக்குண்டத்தின் இயல்பைக்காட்டும் படம். முதலில், கிழக்கு இதுதான் என்று துணிந்து கொள்ளல் வேண்டும். அதன் பிறகு, காரிகையில், 14 அங்குலம் கூறி யிருப்பினும், வேள்வி செய்யும் ஆன்றோர்களின் வழக்கைத் தழுவி, பதின்மூன்றரை அங்குல நீளமுள்ள ஒரு கயிற்றை எடுத்து, நடுவில் ஒரு சங்கு என்னும் முளையை அடித்து அதிற் கட்டிவிட்டு, அக் கயிற்றைச் சுற்றினால் ஒரு சக்கரம் போன்று குறியுண்டாகும் அக்குண்டமே காருகபத்திய மென்னும் வேள்வித்தீயினுடைய இடமாம். இக் குண்டம் மூன்று மேகலைகளை (கழுத்து வரம்புகளை) யுடையதாம். உயரம், 6 அங்குலம். இதை, இங்குப் போடப்பட்டிருக்கின்ற வட்ட வடிவத்திற் கண்டுகொள்க.


இதற்குக் காரிகை :-
प्राचीं निश्चित्य ततः पश्चान् मध्यान्मन्वंगुलेन तु । सूत्रेण भ्रमयेद्गार्हपत्यायतनमुच्यते ॥ என்பது.

Go Top

आहवनीयाग्निः

ஆகவனீயாக்கினிக் குண்டத்தின் இயல்பைக்காட்டும் படம். பிறகு, முன்னர்ப் போட்டுள்ள காருகபத்தியச் சக்கரத்திலிருந்து எட்டு அடி கிழக்கில் தள்ளிப் போய், இருபத்து நான்கு அங்குலங்கள் நீளங்கொண்ட ஒரு கயிற்றை யெடுத்து, அத்துடன் அவ்வளவாக மற்றும் ஒரு பாகத்தையுஞ் சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்ட பங்காகிய இருபத்துநான்கு அங்குலமுள்ள பாதியை இரண்டாய்ப் பங்கிட்டு, அவ்விரண்டு பங்கினுள் உட்சாதியையும் இரண்டு பங்காக்கி, அவற்றில் ஒரு குறி வைத்துக்கொண்டு, அக்கயிற்றை யெடுத்து, அதாவது ஒரு பாதியாகிய இருபத்துநான்கு அங்குலங்களுடன் சேர்த்த பாதியின் நாலில் ஒரு பங்காகிய ஆறங்குலத்தையுஞ் சேர்த்து முப்பதங்குலங்கள் அளவு கொண்ட அக்கயிற்றின் ஒரு தலைப்பை யெடுத்து, நாற்கோணத்தின் கீழ்ப்பக்கத்திற்கு நடுவில் பிடித்துக்கொண்டு, மற்றொரு தலைப்பை நாற்கோணத்தின் மேல்பக்கத்தின் நடுவில் பிடித்துக்கொண்டு, உட்சாதியை மூலையாக்கி இழுக்கில், மேலே முப்பதங்குலமும், கீழே பதினெட்டு அங்குலமுமாக நிற்கும். அப்போது அதன் பக்கத்திலுள்ள உட்பாதியிலும், அவ்வாறே அடுத்த பக்கத்திலும் அக் கயிற்றைப் பிடித்து, அதன் உட்பாதியிலும் கணக்கெடுத்துக் கோடிட்டால் எடுத்த மூலையில், வெளியில் தள்ளுபடி அவ்வாறங்குலமாகும். உள்ளில் பன்னிரண்டு பன்னிரண்டு அக்குலங்களாகவும் நாற்கோணம் இனிதமையும். இதுவே ஆகவனீய அக்கினிக் குண்டமெனப்படும். இது, மூன்று மேகலைகளை (கழுத்து வரம்புகளை) யுடையது. இதன் உயரம், 6 அங்குலம். இதை, இங்கு போடப்பட்டிருக்கின்ற இப்படத்திற் காண்க.

இதற்குக் காரிகை, तद्बहिः प्राक् पदान्यष्टौ गत्वा तु चतुरश्रकम् । द्विः सूर्यांगुलिमानेन कुर्यादाहवनीयकम् ॥१॥ यावत्प्रमाणा रज्जुःस्यात् तावानेवागमो भवेत् । आगमार्धे तु शंकुः स्यात् अंतरर्धे निरंछनम् ॥२॥ प्रविमुच्य ततः पाशौ शंकून् कोणेषु निक्षिपेत् ॥ என்பது

Go Top

दक्षिणाग्निः

தட்சிணாக்கினிக் குண்டத்தின் இயல்பைக் காட்டும் படம். வேதிகையின் நீளத்தை, அதாவது எட்டு அடிகளை, ஐந்தாகவேனும், அல்லது, ஆறாகவேனும் பங்கிட்டுக் கொண்டு, அவ்வெட்டில் ஒரு பங்கு அதனுடன் கூட்டிச் சேர்த்துக் கொண்டு, பிறகு, அக்கயிற்றை மூன்றாய் மடித்துக் குறி வைத்துக்கொண்டு, அக்கயிற்றின் நுனிகளை, வேதிகையின் கீழ் மேல் நடுவில் பிடித்து அம் மூன்று பங்கில் ஒரு பங்கை தெற்கில் மேல் மூலையாகப் பிடிக்கில், மேலே ஒரு பங்கும் கீழே இரண்டு பங்குமாக நிற்கும். அப்போது அதிலுள்ள மூலையே தக்ஷிணாக்கினிக் குண்டத்தின் வடக்கு நடுவாகும். அதிலிருந்து பத்தொன்பது அங்குலக் கயிற்றைச் சுற்றில், அது, அச்சக்கரக் குண்டத்தின் தென்பாதியாகும். இது தக்ஷிணாக்கினியின் இடமாம். இது, மூன்று மேகலைகளை யுடையதாம். இதன் உயரம், 6 அங்குலம். இதை, கீழ்க் காட்டியிருக்கின்ற படத்திற் காண்க.

தெற்கு, மேற்கு, இதற்குக் காரிகை, आयामं पञ्चधा कृत्वा षोढा वागन्तु षष्ठकम् । सप्तमं वा समं त्रेधा दक्षिणाग्न्य परत्रिके ॥ १ ॥
अंगुल्येकोनविंशत्या मण्डलेऽर्धन्तु दक्षिणा । என்பது.

Go Top

अंशम् , श्रोणी

அம்சம், சுரோணி என்பவைகளின் இயல்பைக் காட்டும் படம். வேதியின் நீளத்தை எட்டுப் பங்காக்கி, அதாவது ஒவ்வொரு அடியாய்ப் பங்கிட்டு, அதில் ஐந்து பங்கை வேதிகையின் நடுவிலிருந்து மூலையாகவும், மூன்று பங்கை, மேலேனும் அல்லது கீழேனும் நடுவிலிருந்து குறுக்காய் இழுத்துப் பிடிக்கில், மூன்று பங்கில் பாதி கொண்டது அம்சமாகும். இதில் பதினெட்டங்குலம் தள்ளுபடியாகும். அதாவது ஒன் றரைப் பங்கு தள்ளு உடியாம். அந்தத் தள்ளுபடியில் பாதியை யெடுத்து சேர்த்துக் கொண்ட ஓவே சுரோணியாகும். இதில் தள்ளுபடி ஒன்பது அங்குலமாகும். இதை, கீழே காட்டியிருக்கின்ற படத்திற் காண்க.

மேற்கு இதற்குக் காரிகை वेद्यायामोऽष्टधाकार्यः पञ्चिका मध्यमेक्ष्णया । त्रिका तिर्यक् त्रिकाधैसौ श्रोणी अध्यर्धके परे ॥ १ ॥ वेद्यायतन निर्माणं द्वित्रि मेखलकं क्रमात् ॥ என்பது.

Go Top



त्रेताग्निः - संपूर्णचित्रम्

Go Top



Go Top